நிலாவில் நில அதிர்வுகளா?

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நிலவின் இருண்ட எரிமலைச் சமவெளிகளில் அமைந்துள்ள விரிசல் களை (Tectonic ridges) விஞ்ஞானிகள் முதன்முறையாக வரை படமாக உருவாக்கி யுள்ளனர். இது, ஆராய்ச்சியாளர்கள் முன்பு கணித்ததைவிட நிலாவின் நிலம் அதிகத் துடிப்போடு இருப்பதை உணர்த்துகிறது.
இவை ஆதிகால விண்கல் மோதலால் உருவான ‘தழும்புகள்’ அல்ல. அண்மைக் காலத்தில்தான், அதாவது, சில கோடி ஆண்டுகளுக்குள் இவை உருவாகியிருக்கலாம். நிலவு குளிர்ந்து சுருங்கும்போது ஏற்படும் புவியியல் மாற்றங்களே இவை.
பூமியைப் போல நகரும் தட்டுகள் (Tectonic plates) நிலவில் இல்லை. ஆனால், உட்புற வெப்ப இழப்பால் நிலவு மெல்லச் சுருங்குகிறது. இதனால் அதன் மேலோடு அழுத்தப்பட்டு முகடுகள் உருவாகின்றன. இத்தகைய முகடுகள் ஆயிரக்கணக்கில் கண்டறியப்பட்டுள்ளன.
இது, நிலவின் பரிணாம வளர்ச்சி மற்றும் அதன் உட்புற மாற்றங்கள் குறித்த புதிய புரிதலை விஞ்ஞானிகளுக்கு வழங்கியுள்ளன.
இந்த முகடுகள் வெறும் நிலையான அமைப்புகள் அல்ல. விரிசல்களில் ஏற்படும் சிறிய நகர்வுகள்கூட ‘நிலா நில அதிர்வு களை’ (Moonquakes) உண்டாக்கு கின்றன. முன்பு இத்தகைய நில அதிர்வுகள் நிலவில் மிகவும் அரிதானவை என்று கருதப் பட்டது. ஆனால், தற்போதைய புதிய தரவுகளின்படி நிலவின் பரப்பெங்கும் இத்தகைய அதிர்வுகள் பரவலாக நிகழ்கின்றன.
எதிர்கால நிலவுப் பயணங்களுக்கும் அங்கு அமைக்கப்படவுள்ள மனித குடியிருப்புகளுக்கும் இது முக்கியமான எச்சரிக்கை. உயிரற்ற கோளாகக் கருதப்பட்ட நிலவில், இத்தகைய நில அதிர்வுகள் ஏற்படுவது, எதிர்காலக் கட்டுமானங்கள் மற்றும் விண்வெளி ஆய்வு மய்யங்களின் உறுதித்தன்மைக்குப் பெரும் சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் அமையலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *