ஒருமித்த கருத்துகள் உள்ள கட்சிகளுடன் கூட்டணி சோனியா காந்தி கருத்து

Viduthalai
2 Min Read

அரசியல், இந்தியா

புதுடில்லி, ஏப். 12- ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்று அந்த கட்சியின் மேனாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் தலையங்க பக்கத்தில் அவரது கட்டுரை நேற்று (11.4.2023) வெளி யானது. அதில் கூறியிருப்பதாவது:

ஜனநாயகத்தின் தூண்களான நாடாளுமன்றம், சட்டப்பேரவை, அரசு நிர்வாகம், நீதித் துறையை ஒன்றிய அரசு திட்டமிட்டு சீர் குலைத்து வருகிறது. இதன்மூலம் இந்தியாவின் ஜனநாயகம் கேள் விக்குறியாகி வருகிறது. கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், பிரிவினைவாதம், பட்ஜெட், அதானி குழும ஊழல் உள்ளிட்ட பல்வேறுவிவகாரங்கள் குறித்து கேள்விகளை எழுப்ப எதிர்க் கட் சிகள் திட்டமிட்டிருந்தன. இதை தடுக்க நாடாளுமன்ற கூட்டத் தொடர் முற்றிலுமாக முடக்கப் பட்டது.

எதிர்க்கட்சிகளை குறிவைத்து சிபிஅய் உள்ளிட்ட மத்திய புல னாய்வுஅமைப்புகள் ஏவி விடப் படுகின்றன. எதிர்க்கட்சிகளில் இருந்து ஆளும் பாஜகவுக்கு தாவும் நபர்கள் மீது மட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மீதுதேசிய பாது காப்பு சட்டங்களின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

வெளிநாட்டுக்கு தப்பியோடிய பொருளாதார குற்றவாளி மெகுல்சோக்சி மீதான தாக்கீதை இன்டர்போல் வாபஸ் பெற்றிருக் கிறது. ஓய்வு பெற்ற நீதிபதிகளை தேசவிரோதிகள் என்று ஒன்றிய சட்ட அமைச்சர் முத்திரை குத்து கிறார். ஊடகங்களின் குரல் வளையை நெரிக்க தகவல் தொழில் நுட்ப சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.

வேலைவாய்ப்பின்மை, பணவீக் கம் குறித்து மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் எதுவுமே குறிப் பிடவில்லை. இந்தியாவில் இந்த பிரச்சினைகளே இல்லை என்ற வகையில் ஒன்றிய அரசு செயல் படுகிறது. ஆனால் பால், காய்கறி கள், முட்டை, சமையல் எண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாகஉயர்ந்து வருகி றது. பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர். 2022ஆம் ஆண் டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் என்று அளிக்கப் பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை.

மத விழாக்களை பயன்படுத்தி கலவரங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காக்கிறார். சீனாவுடனான எல்லைப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த ஒன்றிய அரசு மறுத்து வரு கிறது.

அடுத்த சில மாதங்கள் ஜன நாயகத்துக்கு சோதனையான கால மாக இருக்கும். பல்வேறு மாநிலங் களில் நரேந்திர மோடி அரசு தனது அதிகாரத்தை அத்துமீறி செய்யக்கூடும். நாட்டின் அனைத்து பிரச்சினைகளையும் மக்கள் மன்றத்துக்கு காங்கிரஸ் கொண்டு செல்லும். இந்திய அர சமைப்பு, மக்களின் குரலை காக்க காங்கிரஸ் தொடர்ந்து போரிடும். தலைமை எதிர்க்கட்சி என்ற பொறுப்புணர்வு எங்களுக்கு இருக் கிறது. அந்த வகையில் ஜனநாய கத்தை காப்பாற்ற ஒத்த கருத்து டைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராக உள் ளது. இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *