ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் சட்டப் பேரவைக்கு வருகை

1 Min Read

 ஈ.வெ.கி.ச.இளங்கோவன் சட்டப்பேரவைக்கு வந்தார் 

அரசியல்

சென்னை, ஏப். 13- ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் சட்டப் பேரவைக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத் திட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வெ.கி.ச.இளங்கோவன் டெல்லி சென்றுவிட்டு கடந்த மாதம் 15ஆம் தேதி சென்னை திரும்பினார். அன்று இரவு அவருக்கு திடீரென நெஞ்சுவலி, மூச்சுத் திணறல், இருமல் ஏற்பட் டதால், சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தேவையான சிகிச்சை களை அளித்தனர். இதற்கிடையில், கடந்த மாதம் 20ஆம் தேதி அவருக்கு கரோனாதொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. தீவிர சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பு மூலம் குணமடைந்த அவர் கடந்த 15ஆம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில், நேற்று (12.4.2023) சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்த ஈவிகேஎஸ், வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டுச் சென்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *