திருச்சி, மார்ச் 3- பெரியார் மருந்தியல் கல்லூரியின் நான் காமாண்டு இளநிலை மருந்தியல் மாணவர் களுக்கு பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் மூலம் 27.02.2026 அன்று உயர் கல்வி பெறுவதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை வரவேற்புரையாற்றினார்.
Eazy Link Consultancy அமைப்பின் பன்னாட்டு மேம்படுத்துதல் பிரிவின் முதுநிலை மேலாளர் முரளி ராஜேந்திரன் மற்றும் தமிழ்நாடு பிரிவின் தலைமை செயலர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வெளி நாடுகளில் மருந்தியல் துறையிலுள்ள பல்வேறு மேற்படிப்புக்கள் குறித்தும் அதற்கான வழிமுறைகள் குறித்தும் உரையாற்றி, மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்க மளித்தனர்.
துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ண மூர்த்தி முன்னிலை வகித்த இந்நிகழ்விற்கு பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் இயக்குநர் பேரா. ச.ராஜேஷ் நன்றி கூறினார்.
நான்காமாண்டு பயிலும் இளநிலை மருந்தியல் மாணவர் களுக்கு மேற்படிப்பு குறித்த இவ்வழிகாட்டுதல் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
