டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தேர்தல் விதிகள் குறித்த அறிவுறுத்தலை தமிழில் வெளியிடுங்கள், தேர்தல் ஆணையத்தில் திமுக வலியுறுத்தல்.
* கேரளா ஸ்டோரி 2 படத்தை வெளியிட 15 நாட்களுக்கு தடை: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* வங்கியில் பண மோசடி: அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் விசாரணை: தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ரூ.40 ஆயிரம் கோடிக்கும் மேல் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* ஈஷா அறக்கட்டளை எரிவாயு மயானம் விவகாரம் உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் மத்தியஸ்தம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘எப்ஸ்டீன் கோப்புகளில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பொதுப் பதவியில் இருப்பவர்கள் தார்மீகப் பொறுப்பைக் காட்ட வேண்டும்’: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி. ஹர்தீப் பூரி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இந்தியாவில் ‘பொறுப்பு உணர்வு இல்லை’ என குற்றச்சாட்டு.
தி இந்து:
* நீதித்துறை ஊழல் இடம்பெற்ற விவகாரம் என்சிஇஆர்டி 8ஆம் வகுப்பு பாடப் புத்தகத்திற்கு தடை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு; ஒன்றிய அரசு மன்னிப்பு கேட்டது. நீதித்துறையை ஒரு மோசடி நிறுவனமாக சித்தரிக்கும் “மிகவும், மிகவும் திட்டமிட்ட நடவடிக்கை”க்குப் பின்னால் “ஊழல்” பற்றிய “தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பு” இருப்பதாக உச்சநீதிமன்றம் கண்டனம்.
தி டெலிகிராப்:
* நீதித்துறை ஊழல் குறித்த எட்டாம் வகுப்பு புத்தகத்தை திரும்ப பெற என்.சி.இ.ஆர்.டி-க்கு ஒன்றிய அரசு உத்தரவு. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், என பிரதமர் மோடி பேச்சு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு அசாம் முதலமைச்சர் ஹிமான் சர்மாவுக்கு உயர்நீதிமன்றம் தாக்கீது.
– குடந்தை கருணா
