உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய பிஜேபி அரசு பகிரங்க மன்னிப்பு; மன்னிப்பை ஏற்காத தலைமை நீதிபதி

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, பிப்.27  நீதித்துறையில் ஊழல் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நூலில் இருந்த பாடம் குறித்து உச்சநீதிமன்ற கடுமையான கண்டனத்தை தெரி வித்தை அடுத்து நீதிமன்றத்தில் 25.2.2026  அன்று நடந்த விசாரணையின் போது ஒன்றிய அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது. ஆனால் தலைமை நீதிபதி சூர்யகாந்த  மன்னிப்பை ஏற்க மறுத்து துப்பாக்கியால் சுட்டதால் ரத்தம் வழியும் நிலையில் நீதித்துறை உள்ளது என்று பேசியுள்ளார்.

நீதித் துறையில் ஊழல்

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத் திட்டத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) உருவாக்கியுள்ளது. இதில் ‘நீதித்துறையில் ஊழல்’ என்ற தலைப்பில் பாடம் ஒன்று சேர்க்கப் பட்டுள்ளது.

இந்த பாடம் நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் குறிப்பிட்ட பாடம் குறித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

நீதித்துறையில் ஊழல் இருப்பதாக பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் ஒருதலைபட்சமாக இருப்பதாக அவர்கள் வாதிட்டனர். இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை ‘தானாக முன்வந்து’ விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த விவகாரம் குறித்து கடுமையான அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, யாரும் நீதித்துறையை அவமதிக்க அனுமதிக்க மாட்டோம். சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று மிகக் கடுமையாகத் தெரிவித்தது.

பள்ளி மாணவர்கள் மத்தியில், நீதித்துறையைப் பற்றித் தவறான பிம்பத்தை உருவாக்குவது திட்ட மிடப்பட்ட நடவடிக்கை என்று நீதிபதிகள் விமர்சித்தனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மட்டுமல்லாது, பல்வேறு உயர் நீதிமன்ற நீதிபதிகளும், வழக்குரைஞர் சங்கங்களும் இந்த பாடத்தால் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறினர். இந்த சர்ச்சைக்குரிய பாடத்தை எழுதியவர்கள் யார், எதன் அடிப்படையில் இந்தப் பகுதிகள் சேர்க்கப்பட்டன என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஒன்றிய அரசுக்கும், என்சிஇஆர்டி அமைப் புக்கும் தாக்கீது அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கையை தொடர்ந்து ஒன்றிய அரசு நிபந்தனை யற்ற மன்னிப்பு கோரியுள்ளது.

25.2.2026 அன்று நடந்த வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்ற நீதிபதி ஒன்றிய அரசின் வழக்குரை ஞரைப் பார்த்து நீங்கள் செய்துள்ள இந்த காரியத்தால் என் நீதித்துறை துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்தம் வழியும் நிலையில் உள்ளது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார்

 பாடத்தில் என்ன இருந்தது?

8-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற தலைப்பில் பாடம் சேர்க்கப்பட்டிருந்தது.நீதித்துறை யின் பல்வேறு நிலைகளில் மக்கள் ஊழலை எதிர்கொள்கிறார்கள் என்றும், இது ஏழை எளியவர்களுக்கு நீதி கிடைப் பதைத் தடுக்கிறது என்றும் அந்தப் பாடத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.

உச்ச நீதிமன்றத்தில் சுமார் 81,000 வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் 62.4 லட்சம் வழக்குகளும், மாவட்ட நீதிமன்றங்களில் 4.7 கோடி வழக்கு களும் நிலுவையில் உள்ளதாகப் புள்ளி விவரங்களும் இடம் பெற்றிருந்தன. 2017 முதல் 2021 வரை நீதித்துறைக்கு எதிராக 1,600-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *