பிளஸ் டூ படித்த ஆதிதிராவிட பழங்குடி மாணவர்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கு மார்ச் 25 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.23- பிளஸ்-2 படித்து முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், 3 ஆண்டு இளங்கலை ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பிளஸ்-2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், தேசிய தேர்வு முகமையால் (என்டிஏ) நடத்தப்படும் தேசிய ஹோட்டல் மேனேஜ்மென்ட் கவுன்சில் (NCHMCT JEE) நுழைவுத் தேர்வு மூலமாக, தரமணியில் இயங்கி வரும் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு நியூட்ரிஷன் நிறுவனத்தில் 3 ஆண்டு முழுநேர இளங்கலை அறிவியல் (பி.எஸ்சி) பட்டப்படிப்பில் சேர்ந்து பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நுழைவுத் தேர்வு நாள்

ஏப்ரல் 25ஆம் தேதி (இணையதளம் வாயிலாக நடைபெறும்). விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 25ஆம் தேதி. கல்வித் தகுதி: பிளஸ்-2 வகுப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வருமான வரம்பு: குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள மாணவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களை http://exams.nta.nic.in/nchm-jee/ என்ற இணையதளத்தில் அறியலாம்.

இப்படிப்பிற்கான செலவை தாட்கோ ஏற்கும். படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு நட்சத்திர விடுதிகள், உயர்தர உணவகங்கள், விமானத் துறை, கப்பல் துறை மற்றும் சுற்றுலா நிறுவனங்களில் பணிபுரிய வழிவகை செய்யப்படும். ஆரம்ப கால ஊதியமாக ரூ. 25,000 முதல் ரூ. 35,000 வரை பெறலாம்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *