உணவு விடுதியில் தண்ணீர் குடித்த தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மீது கொடூரத் தாக்குதல்

1 Min Read

அரசியல்

ரொஹதக், ஏப் 15  அரியானா மாநில எல்லையில் உள்ள பில்வாரா என்ற ஊரில் உயர்ஜாதிக்காரர் ஒருவரின் தேனீர் கடையில் வெளியூரில் இருந்து வேலைபார்க்க வந்த இளைஞர் ஒருவர் தண்ணீரைக் குடித்துவிட்டார். உடனே அவரைப் பிடித்து நீ எந்த ஜாதி என்று கேட்டுள்ளார். 

அவரும் தன்னுடைய ஜாதியைக் கூறியுள்ளார். அவரது ஜாதி அரியானா, ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் தாழ்த்தப் பட்டவர் பிரிவில் வருமாம். இதனை அடுத்து உணவு விடுதி  ஊழியர்களோடு சேர்ந்து அந்த இளைஞரை கடுமையாக தாக்கி கொதிக்கும் தண்ணீரையும் அவர் மீது ஊற்றியுள்ளனர்.  இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித் ததும் ஓட்டல் உரிமையாளர் தப்பிச் சென்றுவிட்டார்.  தாக்குதலுக்கு துணை போன ஊழியர்கள் இருவரை காவல் துறையினர் கைது செய் துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *