யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வு எத்தனை முறை எழுதலாம்? வயது வரம்பு என்ன?

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, பிப்.19- ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தரப்பில் ஆண்டுதோறும் பல்வேறு பணிகளுக்காக சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது.

அதன் படி, இந்த ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியானது. இந்த ஆண்டில் 933 பணியிடங்கள், இந்தத் தோ்வு மூலம் நிரப்பப்படவுள்ளது. இதில் 33 பணியிடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப் பட்டுள்ளது. இதற்கான முதல்நிலைத் தோ்வு மே மாதம் 24-ஆம் தேதி நடத்தப்படுகிறது.

யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் ஒருவர் எத்தனை முறை தேர்வை எழுதலாம், அதற்கான வயது வரம்பு குறித்து பின்வருமாறு காணலாம்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் தகுதியுள்ள தேர்வர்கள் ஒவ்வொருவரும் 6 முறை இந்தத் தேர்வினை எழுதலாம். இருப்பினும், எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுதுவதில் வயது வரம்பு தளர்வுகள் உள்ளன.

யு.பி.எஸ்.சி.

வயது வரம்பு தளர்வு விவரம்: பொதுவாக சிவில் சர்வீஸ் தேர்வை எழுதுவதற்கு ஒருவருக்கு குறைந்த பட்சம் 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்சமாக 32 வயது வரை எழுதலாம். இருப்பினும், ஒவ்வொரு பிரிவினருக்கும் வயது வரம்பு தளர்வுகள் உள்ளன.

எஸ்சி/எஸ்டி: வயது வரம்பு முடியும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வெழு தலாம். (32 + 5 = 37 வயது வரை)

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்: 9 முயற்சிகள். (32 + 3 = 35 வயது வரை)

மாற்றுத்திறனாளிகள்: GL/EWS/OBC பிரிவினருக்கு 9 முயற்சிகள்; (32 + 10 = 42 வயது வரை)

மாற்றுத்திறனாளிகள்: எஸ்சி/எஸ்டி பிரிவினர் வயது வரம்பு முடியும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வெழு தலாம். (32 + 15 = 47 வயது வரை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *