பிரதமரை தேர்ந்தெடுப்பதில், காமராஜரைப் போலவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘கிங் மேக்கராக’ உருவாவார்! மணிசங்கர் கூறுகிறார்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருவனந்தபுரம், பிப். 19– இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க சிறந்த மனிதர் தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் மணி சங்கர் தெரிவித்தார்.

பிரதமருக்கு உதவுவார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேவையின்றி பேசுவதை விட முக்கியமான பிரச்சினைகளை எழுப்புவதில் கவனம் செலுத்துகிறார் என்றும், ராகுல் காந்தி பிரதமராவதற்கு அவர் உதவியாக இருப்பார் அவர் என்றும் குறிப்பிட்டார்.

பிரதமர் மன்மோகன் சிங்கின்கீழ் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராகப் பணியாற்றிய அவர், எஎன்அய் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில் “கடந்த ஓர் ஆண்டாக மு.க.ஸ்டாலின் செய்தது இந்தியாவில் கூட்டாட்சிக்கு பொருத்தமான ஒவ்வொரு விஷயத்தையும் எழுப்புவதாகும்” என்றார்.

கிங் மேக்கர்

அவர் ஒருபோதும் ‘சூட்பூட்கி கி சர்க்கார்’ என்று சொல்லவில்லை. அவர் ஒருபோதும் ‘சவுக்கிதார் சோர்ஹை’ என்று சொல்லவில்லை. ராகுல் காந்தி பிரதமராக வருவதற்கு அவர் தடையாக இருக்க மாட்டார் என்ற மிகப்பெரிய நற்பண்பு அவருக்கு உண்டு என்று அவர் கூறினார்.

மேலும், ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு பிரதமர் பதவியை மறுத்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் பெருந்தலைவர் காமராஜுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே ஒரு வரலாற்று இணையை மணிசங்கர் எடுத்துரைத்தார்.

பாத்திரங்கள் தனிப்பட்ட லட்சியங்களை விட ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். முன்னாள் காங்கிரஸ் பெருந்தலைவர் காமராஜைப் போலவே ஸ்டாலின் ஒரு கிங்மேக்கர் பாத்திரத்தை வகிக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

‘இந்தியா’ கூட்டணி ஒருங்கிணைக்கப்பட்டால், அதை ஒருங்கிணைக்க சிறந்த மனிதர் மு.க.ஸ்டாலின்தான் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு மணிசங்கர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *