உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் பணியிடங்களில் உயர்ஜாதிப் பெண்கள் மாவட்ட ஆட்சியர்களாக உள்ளனர்.
மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களில் 14 மாவட்டங்களுக்குப் பெண் ஆட்சியர்கள் உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் மாநிலத்தில் பெரிய பல்க லைக்கழகங்களில் பெண் துணைவேந்தர் பதவிக்கும் உயர்ஜாதியினரே நியமிக்கப் பட்டுள்ளனர்.
ராம் மனோகர் லோஹியா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பிரதிபா கோயல்.
தீன்தயாள் உபாத்யாய கோரக்பூர் பல்க லைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பூனம் டாண்டன்.
சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மீரட் பேராசிரியர் சங்கீதா சுக்லா.
டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆஷு ராணி கோஷ்.
திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பிரயாக்ராஜ் ராஜர்ஷி டாண்டன்.
வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழ கத்தின் துணைவேந்தர், பேராசிரியர் சீமா பண்டிட்.
கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழ கத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வந்தனா.
சிங்பட்கண்டே சமஸ்கிருத பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சோனியா நித்யானந்த் டாண்டன்.
டாக்டர் ராஜேந்திர பிரசாத் தேசிய சட்டப் பல்கலைக்கழகம், பிரயாக்ராஜ் பேராசிரியர் உஷா மாண்ட்வி.
மகளிருக்கான இடமா? அங்கேயும் உயர்ஜாதியினரே!
Leave a Comment
