தெலங்கானா நகராட்சித் தேர்தல் 1526 வார்டுகளைக் கைப்பற்றி காங்கிரஸ் பெரும் வெற்றி! பி.ஆர்.எஸ், பா.ஜ.க பின்னடைவு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அய்தராபாத், பிப்.14 தெலங்கானா மாநிலத்தின் 116 நகராட்சிகள் மற்றும் 7 மாநகராட்சிகளுக்கான தேர்தல் முடிவுகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இது வரை வெளியான முடிவு களின் படி, 1,500-க்கும் மேற்பட்ட வார்டுகளைக் கைப்பற்றி காங்கிரஸ் அசைக்க முடி யாத முன்னிலை வகிக்கிறது.

 

முதலமைச்சர் ஏ. ரேவந்த்தின் சொந்தத் தொகுதியான கொங்கலி லும் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ள நிலை யில், எதிர்க் கட்சியான பி.ஆர்.எஸ் மற்றும் பா.ஜ.க பல இடங்களில் பலத்த சரிவைச் சந்தித் துள்ளன.

தேர்தல் முடிவுகள்

மொத்தம் 123 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 2,996 வார்டுகளுக்கு நடைபெற்ற இந்தத் தேர்தலில், வாக்கு எண் ணிக்கை நேற்று (13.2.2026) நடைபெற்றது.

தெலங்கானாவில் மொத்தம் உள்ள வார்டு களில் 1,526 வார்டுகளைக் கைப்பற்றி காங்கிரஸ் முதலிடத்தைப் பிடித் துள்ளது.

பி.ஆர்.எஸ் (BRS): முன்னாள் முதலமைச்சர் கே.சி.ஆர் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சி 772 வார்டுகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

பா.ஜ.க: தெலங்கானா நகராட்சி தேர்தல்களில் பா.ஜ.க 326 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக கரீம்நகர் மாநகராட்சியில் 30 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இதர கட்சிகள்: ஏ.அய்.எம்.அய்.எம் (AIMIM) 66 இடங்களிலும், சி.பி.அய்(எம்) 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

முக்கிய வெற்றிகள் மற்றும் திருப்பங்கள்

முதலமைச்சரின் கோட்டை: முதலமைச்சர் ரேவந்த் தனது வாக் கினைப் பதிவு செய்த கொங்கல் நகராட்சியில், 12 வார்டுகளில் 10-யைக் கைப்பற்றி காங்கிரஸ் சாதனை படைத்துள்ளது.

மாநகராட்சி நிலவரம்: ராமகுண்டம், நல்கொண்டா மற்றும் மஞ்சேரியல் ஆகிய மாநக ராட்சிகளில் காங்கிரஸ் வலுவான முன்னிலை பெற்றுள்ளது. நிசாமாபாத் மாநகராட்சியில் பா.ஜ.க 28 இடங்களை வென்று பெரும்பான்மைக்கு மிக அருகில் வந்துள்ளது.

கொண்டாட்டங்கள்: வெற்றி உறுதியானதைத் தொடர்ந்து, அய்தராபாத் தில் உள்ள காங்கிரஸின் தலைமை அலுவலகமான ‘காந்தி பவன்’ திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

புதிய பொறுப்பா ளர்கள் தேர்வு: தேர் தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் பிப்ரவரி 16-ஆம் தேதி பதவியேற்க உள்ளனர். அன்றைய தினமே நக ராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் மாநகராட்சி மேயர் களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *