இம்பால், பிப்.13 மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி இனத்தவர் களுக்கு இடையே பிரச்சினை வெடித்தது. இதனால் ஏற்பட்ட வன்முறை காரணமாக கடந்த ஓராண்டாக அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப் பட்டது. கடந்த 4-ஆம் தேதி முதலமைச்சர் கெம்சந்த் சிங் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தது. அப்போது குகி மற்றும் நாகா இனத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு துணை முதல மைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து குகி இனத் தவர்கள் கடுமையாக போராட் டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக நாகா இனத்தவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்றுமுன்தினம் (11.2.2026) மணிப்பூரில் கலவரம் உச்சமடைந்தது. அங்குள்ள குகி இனத்தவர்கள் அதிகம் வாழும் உக்ரூல் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகள். அரசு அலுவலகங்கள் ஆகியவற்றிக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும் வன்மு றையை கட்டுப் படுத்த அங்கு ஊரடங்கு அமல்படுத் தப்பட்டு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
