திருவனந்தபுரம், பிப்.12 கேரளாவின் கொல்லம் – புத்தூரில் “பூஜை” என்ற பெயரில் 16 வயது சிறுமியை ஒரு அறைக்குள் அடைத்து வைத்து அத்துமீறியதாக முராரி தந்திரி என அழைக்கப்படும் ராஜன் பாபு என்ற பிரபல ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலம் கொல் லத்தை அடுத்த அரிக்கல் பகு தியைச் சேர்ந்தவர் முராரி தந்த்ரி என்ற ராஜன் பாபு. இவருக்கு 54 வயது ஆகிறது. பிரபல ஜோதிடர். இவரிடம் ஜோதிடம் பார்க்க சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் அவரது ஜோதிட நிலையத்துக்கு வருவது வழக்கம் சம்பவத்தன்று கொல்லம் புத்தூரை சேர்ந்த பெண் ஒருவர் ராஜன் பாபுவிடம் ஜோதிடம் பார்க்க வந்துள்ளார்.
அப்போது அந்த பெண்ணின் 16 வயது மகளுக்கு பேய் பிடித்து இருப்பதாகவும், மாந்திரிகத்தின் மூலம் பேயை ஓட்டலாம் என்று கூறினார். இதை நம்பிய அந்த பெண் நேற்று முன்தினம் தனது மகளை ஜோதிடர் ராஜன் பாபுவின் ஜோதிட நிலையத் துக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
பாலியல் அத்துமீறல்
இதைத் தொடர்ந்து அந்த சிறுமியை மட்டும் ஜோதிடர் தனி அறைக்குள் அழைத்து சென்றுள்ளார். ஆனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக அந்த சிறுமி வெளியே வராததால் சிறுமியின் தாய் அந்த அறைக்குள் சென்று பார்த்திருக்கிறார். அப்போது அந்த சிறுமி அழுதபடி வெளியே வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி யடைந்த அந்த பெண் மகளிடம் என்னவென்று கேட்டார்.
அதற்கு அந்த சிறுமி தன்னை பாலியல் ரீதியாக ஜோதிடர் அத்துமீற முயன்றதாக கூறினார். இதுபற்றிய தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஜோதிட நிலையத்தை முற்றுகையிட்டனர். உடனே ஜோதிடர் ராஜன்பாபு ஜோதிட நிலையத்தின் பின் புறம் வழியாக தப்பி ஓடி தலைமறை வாகி உள்ளார்.
ராஜன்பாபு அறைக்குள் சென்று பார்த்தபோது அது படுக்கை அறைபோல காணப் பட்டது. ரத்தக் கறைகள் காணப் பட்டன.
இதுகுறித்த புகாரின் பேரில் புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜன்பாபுவை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று பரணிக்காவு கோவிலில் வைத்து ராஜன்பாபுவை காவல்துறையினர் போக்சோ பிரிவில் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
