குமரி மாவட்ட கழகம் சார்பாக பகுத்தறிவு பரப்புரை

0 Min Read

அரசியல்

குமரிமாவட்ட திராவிடர் கழகம் சார்பாக  பகுத்தறிவு   பரப்புரை நிகழ்ச்சி குமரிமாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் , முட்டம் ஊராட்சிக்குட்பட்ட கடியப்பட்டணம்  கிராமத்தில் நடைபெற்றது. மாவட்ட திராவிடர்கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். கழக தோழர்கள் மாஸ்டர் டெனிபோஸ், ஆரோக்கிய ரமேஷ், பெய்சில் மற்றும் தோழர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு தந்தை பெரியாருடைய நூல்கள், பகுத்தறிவு கருத்துகள் அடங்கிய துண்டறிக்கைகளை வழங்கி பரப்புரை செய்தனர். .கழக பொறுப்பாளர்கள் தந்தை பெரியாருடைய நூல்களை, தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய நூல்களை  பொதுமக்களுக்கு  வழங்கினர். பொதுமக்கள் ஆர்வமுடன் படித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *