உ.பி.யில் ஒட்டு மொத்தமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைவு : மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா, ஏப் 17 உத்தரப்பிரதேசத் தில் சட்டம்- ஒழுங்கு ஒட்டு மொத்த மாக சீர்குலைந்துவிட்டதாக மம்தா தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சி மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிக் அகமது. ரவுடியாக வாழ்க்கையை தொடங்கிய ஆதிக் அகமது பின்னர் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானார்.
இதனிடையே, கொலை உள்பட 100-க்கும் மேற்பட்ட குற்றவழக்குகளில் ஆதிக் அகமது மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடை பெற்று வந்தது. இதனிடையே, 2006ஆ-ம் ஆண்டு உமேஷ் பால் என்பவரை கடத்திய வழக்கில் ஆதிக் அகமதுவுக்கு கடந்த மாதம் பிரயாக்ராஜ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த வழக்கில் ஆதிக் அகமது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் குற்றவாளியாக அறிவிக் கப்பட்டு அவருக்கும் சிறை தண் டனை விதிக்கப்பட்டது. அதே வேளை, ஆதிக் அகமதுவையும் அவ ரது சகோதரர் அஷ்ரப் அகமதுவை பிரயாக்ராஜில் உள்ள மருத்துவ மனையில் பரிசோதனைக்காக காவல் துறையினர் அழைத்து வந்தனர். அப்போது, அங்கு குவிந்த பத்திரிகை யாளர்கள் குற்றவாளி ஆதிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் அகமது விடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது, பத்திரிகை யாளர் வேடத்தில் வந்திருந்த 3 பேர் திடீரென ஆதிக் அகமது அவரது சகோதரர் அஷ்ரப் அகமது மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத் தினர் இந்த துப்பாக்கிச்சூடு பல்வேறு தொலைக்காட்சிகளில் நேரலையில் ஒளிபரப்பானது. இந்த சம்பவத்தில் ஆதிக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களை மீறி நடந்த இந்த துப்பாக்கிச்சூடு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத் தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடை பெறாமல் இருக்க உத்தரபிரதேசம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத் தில் சட்டம்- -_ ஒழுங்கு ஒட்டு மொத்தமாக சீர்குலைந்துவிட்டதாக மேற்குவங்காள முதலமைச்சர் மம்தா தெரிவித்துள்ளார்.
இது குறித்து மம்தா கூறுகையில், இந்த வெக்கக்கேடான அராஜகத் தால் நான் அதிர்ச்சி யடைந்தேன். உத்தரப்பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு ஒட்டுமொத்தமாக சீர் குலைந்துவிட்டது. காவல்துறையினர் பத்திரிகையாளர்களை கண்டு கொள்ளாமல் குற்றவாளிகள் இப் போது சட்டத்தை கையில் எடுப் பது வெட்கக்கேடான. இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு நமது அரசமைப்பு ஜனநாயகத்தில் இட மில்லை’ என்றார்.