பெங்களூரு, பிப். 10- பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் நிறு வனத்தைச் சேர்ந்த சுவாதி துபே உடன் இணைந்து இந்திய விண்வெளி வீரர் ஷுபான்ஷு சுக்லா அண்மையில் வெளி யிட்டுள்ள ஆய்வறிக்கை, எதிர்காலத்தில் விண் வெளித் துறையில் மிகப் பெரிய மாற்றங்களுக்கு வித்திடும் என எதிர் பார்க்கப்படுகிறது.செவ்வாய்க் கோளில் கட்டுமானங்களை மேற்கொள்ள,அங்கிருந்து எடுக்கப்பட்ட மண் மாதிரி உடன் பெங்களூருவில் உள்ள ஒரு வகை பாக்டீரியாவைக் கலந்து செங்கல்லை உருவாக்க முடியுமென்று இந்த ஆய்வு கூறுகிறது. செவ்வாய் மண்ணில் உள்ள பெர்குளேரேட் இந்த பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்க முயல்கிறது, அப்போது இவற்றின் உருவம் மாறி ஒன்றோடு மற்றொன்று பிணைந்து இறுகுவது கண்டறியப்பட்டுள்ளது. வேதிப்பொருள்களைக் கொண்டு உருவாக்கப் படுகிற செங்கல்லைக் காட்டிலும் இது உறுதியாக உள்ளதால், இந்த ஆய்வு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
