தந்தை பெரியாருடைய தேவை இன்றைக்கு மட்டுமல்ல – என்றென்றும் தேவை. அவர் 200 ஆண்டுகளுக்கு தேவையான அனைத்து கருத்துகளையும் கூறி சென்றுள்ளார். அதில் இன்றைக்குத் தேவையான கருத்துகளை மட்டும் எடுத்து கொள்ளலாம். திராவிட சித்தாந்தம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது பற்றி பேச வேண்டும் என்றால் அது மிகப்பெரிய ஸ்டோரி ஆக இருக்கலாம். அது பொதுவுடமை ஆக மக்கள் மத்தியில் அதிகமாகப் பரப்பப்பட்டது பெரியாரால்தான். அறிஞர் அண்ணா அதை அரசியல்படுத்தினார். பெரியார் காலத்தில் பெண்கள் எப்படி இருந்தார்கள் என்பதற்கு ஓர் உதாரணம் – தேவதாசி முறை. அந்தக் கொடுமையை அனுபவித்தவர்களுக்குதான் அதன் வலிகள் தெரியும். பசி பட்டினியோடு இருப்பவனுடைய பிரச்சினை வெளியில் இருப்பவனுக்கு புரியாது. ஆனால் தேவதாசி போன்ற பெண்களின் பிரச்சினைகளை அவர்களைப் போலவே புரிந்து கொண்ட ஒரே ஆண் பெரியார் மட்டுமே. அதனால் அவர் மீது எனக்கு தீராத காதல் என்று நூலகக்காட்சியில் பெரியார் அரங்கத்திற்கு வந்திருந்த மங்கை ஒருவர் மிக வெளிப்படையாக கூறிய கருத்துகள் பெண்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்ட ஆண் பெரியார் தலைப்பில் Periyar Vision OTT –இல் வெளிவந்துள்ளது. அனைவரும் பார்க்கவும், பகிரவும். நன்றி.
பி. பவானி செல்வி,
அறந்தாங்கி.
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.

சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்! இணைப்பு : periyarvision.com
