52 மாத கால தி.மு.க. ஆட்சியில் 3,256 பகுதி நேர நியாய விலைக் கடைகள் பிரிக்கப்பட்டு சாதனை அமைச்சர் அர. சக்கரபாணி பெருமிதம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பழனி, ஜன.31 தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியின் 52 மாத காலத்திலேயே 3,256 பகுதி நேர நியாய விலைக் கடைகள் பிரிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

முப்பெரும் விழா

பழனி அருகேயுள்ள வயலூரில் திமுக சார்பில் 60 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியேற்றும் விழா, 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா என முப்பெரும் விழா 29.1.2026 அன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமை விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் அர. சக்கரபாணி, திமுக கொடியினை ஏற்றி வைத்தார்.

புதிய இயந்திரங்கள் கொள்முதல்

விழாவில் அமைச்சர் பேசியதாவது:    “பிரிக்கப்பட்ட பகுதி நேர நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் சிரமமின்றி பொருள்களைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக, ரூ.53 கோடி மதிப்பீட்டில் 6,800 புதிய விற்பனை முனைய இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 2,536 பகுதி நேர நியாய விலைக் கடைகள் மட்டுமே பிரிக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சியின் கடந்த 52 மாத காலத்திலேயே 3,256 கடைகள் பிரிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டார்.

இந்த விழாவில் தாளையம், புஷ்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். முன்னதாக கட்சியின் தலைமை பொதுக்குழு உறுப்பினர் மகுடீஸ்வரன் வரவேற்றார். பொள்ளாச்சி  நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி முன்னிலை வகிக்க, சட்டமன்ற உறுப்பினர்  ஜெயராமன், மாவட்ட தி.மு.க. துணைச் செயலர் ராஜாமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *