விமான விபத்தில் உயிரிழந்த அஜித்பவார் துணைவியார் துணை முதலமைச்சர் ஆகிறார்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பை, ஜன.31 தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் (என்சிபி) அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து மகாராட்டிர மாநில துணை முதலமைச்சராக அவரது துணைவியார் சுனேத்ரா பவார் இன்று பதவியேற்க உள்ளார்.

மகாராட்டிர துணை முதலமைச்ச ராக இருந்த அஜித் பவார் கடந்த 28-ஆம் தேதி விமான விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, மகா ராட்டிர அரசியலில் திடீரென ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தொடர்ந்து, துணை முதலமைச்சர் பதவிக்கான முன்மொழிவை அவரது மனைவி சுனேத்ரா பவார் ஏற்றுக்கொண்டுள்ளார். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சுனேத்ரா இன்று (31-ம் தேதி) மாலை 5 மணிக்கு துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருக்கு கலால், விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று என்சிபி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

துணை முதலமைச்சர்

பிப்ரவரி 7-ஆம் தேதி புனே ஜில்லா பரிஷத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சியின் செல் வாக்கை உயர்த்தும் நோக்கில் என்சிபி-யின் மூத்த தலைவர்கள் சுனேத்ரா பவாரின் பெயரை இந்த பதவிக்கு பரிந்துரைத்தனர். பவார் குடும்பத்தினரிடையே விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்ட பின்னரே, இந்த முடிவை அவர் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.

சுனேத்ரா துணை முதலமைச்சராக பதவியேற்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துவிட்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சகன் புஜ்பால் கூறினார். இன்று (31.1.2026) நடைபெற உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சுனேத்ரா பவார் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மகாராட்டிர பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச்சில் நடக்க உள்ளதால், நிதித் துறையை தற்காலிகமாக முதலமைச்சர் பட்னாவிஸ் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். பின்னர் அது தேசிய வாத காங்கிரஸிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *