அண்ணல் காந்தியாரின் நினைவு நாளில் ஏற்கவேண்டிய உறுதிமொழி – ‘‘மதவெறி மாய்த்து – மனிதநேயம் காப்போம்!’’

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

இன்று (30.1.2026) ‘நாட்டுத் தந்தை’ என்று வெகுமக்கள் பலராலும் கொண்டாடப்படும் அண்ணல் காந்தியாரின் 79 ஆவது நினைவு நாள்!

இது வெறும் நினைவு நாள் மட்டுமல்ல; மத வெறிக்கு அவர் பலியான நாள்.

மனித நேயத்தையும், சமூக நல்லுறவையும் விரும்பியவர்.

மதவெறி அரசியல் வளையத்திற்குள் இந்திய நாட்டையே
கொண்டு வரத் துடிக்கிறார்கள்!

மதவெறி காரணமாக காந்தியாரின் உயிரைக் குடித்த உயர்ஜாதியினரான கோட்சேவுக்குப் பயிற்சி அளித்த அதே ஆர்.எஸ்.எஸ்., இன்றும் அது பல்வகை தந்திர, ஆரிய சூழ்ச்சி, வியூகங்களால், பன் மதங்கள், பல மொழிகள், பல நாகரிகக் கலாச்சாரங்களைக் கொண்ட இந்தியாவை ஒழித்து, ஒரே மதம் (ஹிந்து மதம்), ஒரே மொழி (சமஸ்கிருதம்), ஒரே கலாச்சாரம் (ஆரிய சமஸ்கிருத கலாச்சாரம்) என்று மாற்றிட, அனைத்து முயற்சிகளையும் சட்டப்பூர்வமாகவும், சட்டங்களுக்கு அப்பாற்பட்டும், வெகு மும்முரமாக ஜனநாயகத்திற்கு விடை கொடுத்து, ஒற்றை (அதிபர்) ஆட்சிமூலம் தங்களது மதவெறி அரசியல் வளையத்திற்குள் இந்திய நாட்டையே கொண்டு வரத் துடித்து வேக வேகமாக செயல்படும் போக்கு எதார்த்தமாகத் தெரிகிறது!

அனைத்து அரசியல் அங்கங்களையும் காவி மயமாகுவது – ஒன்றிய அரசின் அன்றாடப் பணியாகி வருகிறது!

அண்ணல் காந்தியார் பெயர்கூட, கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்திலிருந்து அகற்றப்பட்டு, ‘ராம்ஜி’கள் அந்த இடத்தில் ஆதிக்கம் செலுத்தத் துணிந்துவிட்டனர்!

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சிறுபான்மைச் சமு தாய மக்கள் நிலையோ மிக மிகப் பரிதாபத்திற்குரியதாக உள்ளது!

‘‘மதவெறி மாய்த்து –
மனிதநேயம் காப்போம்!’’

எனவே, இந்நாளில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒரே உறுதிமொழி, ‘‘மதவெறி மாய்த்து – மனிதநேயம் காப்போம்’’ என்பதே!

கி.வீரமணி

  தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை  

30.1.2026   

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *