‘மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டம்’ பெயர் மாற்றம் ஆந்திராவில் போராட்டம் ராகுல் காந்தி பங்கேற்பு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அமராவதி, ஜன.29 ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா டில்லியில் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் (100 நாள்) பெயரை ஒன்றிய அரசு மாற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது. 20 ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 2ஆம் தேதி இந்த திட்டத்தை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராஜசேகர ரெட்டி ஆகியோர் ஆந்திராவில் தொடங்கி வைத்தனர்.

ஆதலால், அதே நாளில் ஆந்திராவில் ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தை நடத்த உள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேசிய தலைவர் கார்கேவுக்கு அழைப்பு விடுத்தேன். அவர்கள் வர சம்மதம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு ஷர்மிளா கூறினார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *