நெல்லை, ஜன.29 நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது.
இதில் கலந்துகொண்ட பேரவைத்தலைவர் மு. அப்பாவு, மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கிப் பேசினார். பின்னர் செய் தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:-
மகாராட்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் மற்றும் அவருடன் பயணித்த 4 பேர் விமான விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் என்ற முறையில், உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கும், மகாராட்டிர மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனு தாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். நெல்லை மாவட் டத்தில் முதற்கட்டமாக 9,703 பேருக்கு வழங்கப்பட்டது.
மேலும் 5,469 தனியார் கல்லூரி மாணவ-மாணவி களுக்கு வழங்கப்படுகிறது. இதில் இன்று மட்டும் 2,480 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த மடிக் கணினியைப் பயன்படுத்தி உலகத் தகவல்களை தெரிந்து கொண்டு வேலைவாய்ப்பை தேடிக்கொள்ள வேண்டும். ஆடல், பாடல், நடிப்பு போன்றவை எல்லாம் நீர்க்குமிழி போன்றது. அதை பொழுதுபோக்காக மட்டுமே பார்க்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.
சட்டமன்றத்திற்கு ஆளுநர் வந்ததும், சென்றதும் நல்ல முறையில் இருந்தது. ஆனால், அவர் அச்சிடப்பட்ட உரையை வாசிக்கவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை முதலமைச்சர் வழங்கினார்.
ஆளுநர் உரையே அவர் ஒப்புதல் அளித்த பிறகுதான் அச்சிடப்பட்டது. அதை வாசிக்க மட்டுமே அவருக்கு அதிகாரம் உள்ளது. சொந்தக் கருத்துகளை பேசவோ, தவிர்ப்பதற்கோ அதிகாரம் இல்லை. முதலமைச்சர் ஜனநாயக முறைப்படியே நடந்து கொண்டார்.
தமிழக வெற்றிக்கழகமும், பா.ஜ.க.வும் இணைந்து நாடகம் ஆடுகிறார்கள். இவர்கள் இருவரும் கொள்கை ரீதியாக இணைந்து, தி.மு.க.விற்கு எதிராக சிறுபான்மையினர் வாக்குகளை பிரிக்க முயற்சி செய்கிறார்கள். நடிகர் விஜய் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு, தற்போது அரசியலுக்கு வந்து பா.ஜ.க.வுடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
வேறு கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஓவைசி என்பவர் எப்படி பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறாரோ, அதேபோல் தான் தமிழ்நாட்டில் விஜயை முன்னிறுத்த பா.ஜ.க. பார்க்கிறது. ஆனால் சிறுபான்மை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். பா.ஜ.க. ஆதரவு சக்திகளுக்கு அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
