பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் ஆங்கில இலக்கிய பிரிவின் மூன்றாவது கூட்டம்

2 Min Read

திராவிடர் கழகம்

சென்னை, நவ. 6- நவம்பர் 5ஆம் தேதி பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் ஆங்கில இலக்கிய பிரிவின் மூன்றாவது மாதாந் திர கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவாணர் வளாகத்தில் அமைந் திருக்கும் புதுமைப்பித்தன் அரங் கில் நடைபெற்றது பிரபல மன நல மருத்துவரான ராதிகா முரு கேசன், கேத் மில்லட் எழுதிய “பாலியல் அரசியல்” (செக் ஸுவல் பாலிடிக்ஸ்) என்ற ஆங்கில நூலை மிகச் சிறப் பாகத் திறனாய்வு செய்தார்.

பாலியல் அரசியல்”  1970 இல் பெண்ணிய எழுத்தாளர் கேட் மில்லெட் என்பவரால் எழுதப்பட்ட ஒரு புத்தகம். பெண்ணிய இலக்கியம் மற்றும் கோட்பாடு துறையில் குறிப்பிடத்தக்கப் படைப் பாகும். வரலாற்று ரீதியாகப் பெண்களை ஒடுக்கிய ஆணா திக்க அதிகார அமைப்புகளை யும் சமூக நெறிமுறைகளையும் இந்நூல் விமர்சனம் செய்கிறது. பாலினம், பாலியல் மற்றும் அரசியலின் பல்வேறு அம்சங் களை மில்லெட் ஆராய்கிறார், பாலியல் ஒடுக்குமுறை, இலக் கியத்தில் பெண்களின் சித்த ரிப்பு மற்றும் பெண்களின் வாழ்க்கையில் ஆணாதிக்கத் தின் தாக்கம் போன்ற தலைப்பு களில் புத்தகம் எழுதப்பட்டு உள்ளது. மருத்துவர் ராதிகா மிகச் சிறப்பான முறையில் இப்புத்தகத்தின் கருத்துகளை விளக்கினார். உரையினி டையே கேள்விகள் கேட்டு பார்வையாளர்களிடம் பதில் வாங்குவதன் மூலம் அவர் களையும் திறம்படப் பங்கு பெற செய்தார். நிகழ்ச்சியின் இறுதிப் பகுதியில் நண்பர்கள் பல்வேறு விதமான கேள்விகள் கேட்க அதை புன்சிரிப்போடு அவர் எதிர்கொண்டு விளக் கியது சிறப்பு‌.

சென்னை மாவட்ட நூலக குழுவின் தலைவர் மனுஷ்யபுத் திரன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி இந்நூலினை ஒட்டிய கருத்துரையை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் ஜாய்சி மற்றும் பிரேம் தொடக்க உரை மற்றும் நன்றி யுரை வழங்கினர்.

ஏராளமான இளைஞர்க ளும் நண்பர்களும் கலந்து கொண்டார்கள்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளின் படி மூன்றாவது ஆங்கில இலக் கியக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கூட் டத்தில் கலந்துகொண்ட அனை வரும் நமது இயக்கத்தைச் சாராத புதிய தோழர்கள் என் பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச் சியின் தொடக்கத்தில் பகுத்த றிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் கோ. ஒளிவண்ணன் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் நோக் கத்தையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொலை நோக்கு திட்டங்களைக் குறித் தும் சிற்றுரை வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *