குடும்ப அட்டை இருந்தால் ரூ.25 லட்சம் கடன் தமிழ்நாடு அரசு தரும் வாய்ப்பு!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.28- தமிழ் நாடு அரசு, சுய தொழில் தொடங்க விரும்பும் மக்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் திட்டங்களின் நோக்கம். அந்த வகையில், குடும்ப அட்டை உள்ளிட்ட அடிப்படை ஆவணங்கள் இருந்தால் ரூ.25 லட்சம் வரை கடனுதவி பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் சிறு வணிகம், விவசாயம், பாரம்பரிய தொழில்கள் போன்றவற்றை தொடங்க அரசு நேரடியாக ஆதரவு அளிக்கிறது.

இந்த கடன் உதவி திட்டங்களை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEEDCO) செயல்படுத்துகிறது. இது தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் நிறுவனம். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பினரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் பல ஆண்டுகளாக இந்த கழகம் செயல்பட்டு வருகிறது. தனிநபர்கள் தவிர, சுய உதவிக் குழுக்கள் இந்த திட்டத்தின் கீழ் கடனுதவி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கடன் உதவிக்கு சில முக்கிய தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர் பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் அல்லது சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 60 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். மேலும், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த கடனுதவி வழங்கப்படும். இந்த நிபந்தனைகள் மூலம் உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு உதவி கிடைக்க அரசு முயற்சி செய்கிறது.

ரூ.25 லட்சம் கடன்

TABCEEDCO மூலம் தனிநபர் கடன் திட்டம் மற்றும் குழுக் கடன் திட்டம் வழங்கப்படுகிறது. தனிநபர்கள் சிறு வணிகம், விவசாயம், கைவினை மற்றும் பாரம்பரிய தொழில்கள் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடன் பெறலாம். ரூ.1.25 லட்சம் வரை 7% வட்டி, ரூ.1.25 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 8% வட்டி விதிக்கப்படுகிறது. திருப்பிச் செலுத்தும் காலம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை. சுய உதவிக் குழுக்களுக்கு ஒருவருக்கு ரூ.1.25 லட்சம் வரை, ஒரு குழுவுக்கு அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை 7% வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. குழு குறைந்தது 6 மாதங்கள் செயல்பட்டிருக்க வேண்டும். அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் வரை குழுவில் இருக்கலாம். ஆண், பெண் இருபாலருக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.

பால் உற்பத்தியாளர்களுக்காக தனி கறவை மாடு கடன் திட்டமும் உள்ளது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஒரு மாட்டிற்கு ரூ.60,000 வீதம், இரண்டு மாடுகள் வரை ரூ.1.20 லட்சம் கடன் 7% வட்டியில் வழங்கப்படுகிறது. திருப்பிச் செலுத்தும் காலம் 3 ஆண்டுகள். இந்த அனைத்து திட்டங்களுக்கும் விண்ணப்பிக்க ஜாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, வருமானச் சான்று, அடையாள ஆவணங்கள் அவசியம். கூடுதல் விவரங்களுக்கு TABCEEDCO-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *