டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி., எம்.ஆர்.பி. – தேர்வான 10 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை! பிப்ரவரி முதல் வாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

 

சென்னை, ஜன. 28- டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி மற்றும் எம்ஆர்பி ஆகிய அமைப்புகள் மூலம் அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள சுமார் 10 ஆயிரம் பேருக்கு, பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

தேர்வு வாரியங்கள்

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் அலுவலர்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாகவும், ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வாயிலாகவும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRP) மூலமாகவும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

* டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு மூலம் 5,307 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் 1,700 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRP) வாயிலாக ஏறத்தாழ 3,000 மருத்துவப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விழா ஏற்பாடுகள்

10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோ ருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதற்காகச் சென்னையில் பிப்ரவரி முதல் வாரத்தில் மாபெரும் விழா ஒன்று நடைபெற உள்ளது.

இது தொடர்பாக அனைத்துத் துறைகளின் செயலாளர்களுக்கும் மனிதவள மேம்பாட்டுத் துறைச் செயலாளர் சி.சமயமூர்த்தி அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

“புதிய பணியாளர்களுக்குப் பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட தேர்வு வாரியங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணைகளைத் தயாராக வைத்திருக்குமாறு அந்தந்தத் துறைத் தலைவர்கள் மற்றும் பணி நியமன அலுவலர்களுக்குச் செயலாளர்கள் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *