ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்ற கருநாடகா முதலமைச்சர் சித்தராமையா கைது!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெங்களூரு, ஜன.28 ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணியாகச் சென்ற கரு நாடக முதலமைச்சர் சித்தராமையா கைது செய்யப்பட்டார்.

கருநாடகாவில் ஆளுநர் மாளி கையை நோக்கிச் செல்வோம் என்று அறிவித்து முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கட்சியின் பிற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரண்டு பேரணியாக புறப்பட்டுச் சென்றனர்.

ஒன்றிய அரசு, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்குப் பதிலாக ‘வி.பி.-ஜி ராம் ஜி’ என்ற புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர்கள் பேரணியாகச் சென்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை ஆளுநர் மாளிகை அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றனர். எனினும், அவர்கள் தொடர்ந்து முன்னேற முயன்றனர். இதனால், காவல்துறையினருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை கலந்து செல்லும்படி காவல்துறையினர் கூறி னர்.

ஆனால், அவர்கள் தொடர்ந்து பேரணியாகச் செல்ல முயன்றதும், காவல்துறையினர் அவர்களை கைது செய்து, காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த சம்பவம் நடப்பதற்கு முன் போராட்டக்காரர்கள் முன்னிலையில் பேசிய சித்தராமையா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய அரசின்போது, ஊரக வேலை வாய்ப்பு திட்டம் அறிமுகப்ப டுத்தப்பட்டது. அதனை ஒன்றிய அரசு அழிக்க முயற்சிக்கிறது.

இந்த ‘வி.பி.-ஜி ராம் ஜி’ திட்டத்தில் உள்ள ராம், தசரத ராமரோ அல்லது சீதா ராமரோ அல்ல. அது ரோஜ்கார் மற்றும் ஆஜீவிகா இயக்கத்தின் வளர்ச்சி யடைந்த பாரதத்திற்கான உத்தரவாதம் (கிராமின்) என்பதே ஆகும் என்றார்.

இதற்கு முன்னர் என்ன வேலை செய்ய வேண்டும் என பஞ்சாயத்துகள் முடிவு செய்யும். ஆனால், பஞ்சாயத்து களின் பங்கு கடுமையாகக் குறைக்கப்பட்டு உள்ளது என அவர் குற்றச்சாட்டாகக் கூறினார்.

மாலையில், கைதான சித்தராமையா உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *