கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 28.1.2026

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* இது மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்கும்: திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பேட்டி.

* பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: விபி ஜி ராம் ஜி, எஸ்அய்ஆர் பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* 15 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை.. பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்!

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மோடியின் டபுள் என்ஜின் சர்க்காரில் லட்சணம்: ம.பி.யில் குடியரசு தின அதிர்ச்சி: மத்தியப் பிரதேசத்தில் மெஹர் மாவட்டத்தில் பட்டிவான் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு கிழிந்த நோட்டுப் புத்தக பக்கங்களில் மதிய உணவு பரிமாறப்பட்டது; இந்தச் சம்பவத்தின் காட்சிப்பதிவு விரைவாக பரவியதைத் தொடர்ந்து பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மூத்த பள்ளி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

தி இந்து:

* வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் சேர்த்திட, புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை இழப்பு, பயணச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று இந்திய ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தி டெலிகிராப்:

* 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று இந்தியாவில் வேலைவாய்ப்புக்கு வெளியே இருக்கும் படித்த பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று நோபல் பரிசு பெற்ற அபிஜித் விநாயக் கொல்கத்தாவில் தெரிவித்தார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது, நலத்திட்டங்கள் பின்வாங்குகின்றன: பொருளாதார நிலை குறித்து காங்கிரஸ் அறிக்கை. ஒரு கவர்ச்சியான சித்திரத்தை முன்வைப்பதற்காக தரவுகளைத் திரித்துக் காட்டுவதாக மோடி அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *