ஊழலைப் பற்றி பேசும் பிஜேபி ராஜஸ்தான் ஆட்சியில் 10 ஆயிரம் கிலோ வெடி மருந்து பறிமுதல்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாகவுர், ஜன.28- ராஜஸ்தானின் நாகவுர் மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10,000 கிலோ அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

குடியரசு தின விழா பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்த நிலையில், மிகப்பெரிய அளவில் வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டது ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நாகவுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மிருதுல் கச்சவா செய்தியாளர்களிடம் கூறியதாவது: “வெடிமருந்துகள் சட்டவிரோதமாக வாங்கப்படுவதாகவும், பெருமளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், மாவட்ட சிறப்புப் படை ஜனவரி 24இல் ஹர்சோர் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் அதிரடி சோதனை நடத்தியது. அப்போது அங்கு சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் கிலோ அம்மோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் டெட்டனேட்டர்கள், கம்பிகள் உள்ளிட்ட சுரங்க வெடிப்புக்குப் பயன்படுத்தப்படும் இதரப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பாக சுலைமான் கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது வெடிப்பொருட்கள் சட்டம் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், அவர் சட்டப்பூர்வமான மற்றும் சட்டவிரோதச் சுரங்கங்களுக்கு இந்த வெடிப்பொருட்களை விநியோகம் செய்தது தெரியவந்துள்ளது. சுலைமான் கான் மீது ஏற்கனவே வெடிப்பொருட்கள் சட்டத்தின் கீழ் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன” இவ்வாறு மிருதுல் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *