இராமநாதபுரத்தில் பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா, தமிழர் தலைவர் ஆசிரியர் இனஎழுச்சியுரையாற்றுகிறார்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தங்கச்சிமடம், ஜன. 26- 24.1.2026 அன்று மாலை ஆறு மணிக்கு இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மாவட்ட கழகத் தலைவர் கே.எம்.சிகாமணி தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் மு.முருகேசன் வரவேற்று செயலாக்கவுரை வழங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரை யாற்றினார். மாவட்ட ப.க.தலைவர் பேரின்பம், மாவட்ட ப.க.செயலாளர் கெவிக்குமார், ஒன்றிய தலைவர் எ.தேவசகாயம், இராமேசுவரம் நகரத் தலைவர் எட்வர்டு, தங்கச்சிமடம் தலைவர் எ.குழந்தைராயர், பரமக்குடி நகரதலைவர் தலைவர் முத்துராமன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜான் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினார்கள்.

தீர்மானங்கள்

அறிவுலகப்பேராசான் தந்தை பெரியாரின் அருந்தொண்டினை உலகறியச் செய்வதற்கு திருச்சி சிறுகனூரில்  அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு மாவட்டக் கழகம் சார்பில் ரூ.10 இலட்சம் நிதி திரட்டியளிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

இராமநாதபுரத்தில் பெரியார் உலகத்திற்கு நிதி வழங்கல் விழா, இதுதான் ஆர்.எஸ்.எஸ்.பிஜேபிஆட்சி இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி என்ற தொடர் பரப்புரை கூட்டத்தை நடத்துவதற்கு தேதியளித்து உதவுமாறு தமிழர் தலைவர் அவர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. இராமேசுவரம் நகர செயலாளர் சி.அறிவுச்செல்வன் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *