எஸ்.அய்.ஆர். செயல்முறை வாக்காளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் குற்றச்சாட்டு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கொல்கத்தா, ஜன.26 மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்.அய்.ஆர்.) நடவடிக்கை குறித்து அம்மாநிலத்தை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற 92 வயதான பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் குற்றம் சாட்டி உள்ளார்.

தேசிய ஊடகத்திற்கு பேட்டி யளித்த அவர், வாக்காளர் பட் டியல் திருத்தம் என்பது மிகவும் கவனத்துடனும், போதுமான நேரத்தை எடுத்துக்கொண்டும் செய்யப்பட வேண்டிய ஒன்று. ஆனால், மேற்கு வங்காளத்தில் அது அவ்வாறு நடப்பதாகத் தெரிய வில்லை. வாக்காளர்கள் தங்களது ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும், பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்யவும் போதிய கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறினால், அது வாக்காளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமல்லாமல், இந்திய ஜனநாயகத்தையே அவமதிக்கும் செயலாகும் என்று தெரிவித்துள்ளார்.  முன்னதாக அமர்த்தியா சென் அவரது வாக்காளர் விவரங்களை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் அவருக்கு தாக்கீது அனுப்பியது பேசு பொருளானது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *