நம்புங்கள், இவர் ஒரு நீதிபதி! தெர்மாகோல் தீபத்தூணில் விளக்கேற்றிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருப்பரங்குன்றம் பிற மத வழிபாட்டுத்தலம் அருகில் உள்ள எல்லைக்கல்லை தீபத்தூண் என்று கூறி அதில் ஒன்றிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்போடு சென்று விளக்கேற்றுங்கள் என்று கூறியவர் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.

நேற்று (25.1.2026) சென்னை – சேத்துப்பட்டு சின்மயா கலாச்சார அரங்கத்தில் 2025 ஆம் ஆண்டில் சிறந்த ஆன்மீகவாதி விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு, அங்கு வைக்கப்பட்ட திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள எல்லைக் கல் போன்ற ஒன்றை தெர்மகோலில் செய்து, அதன் மீது அகல் விளக்கு ஒன்றை வைத்து நீதிபதி
ஜி.ஆர்.சுவாமிநாதன் ஏற்றினார்.

வேல் யாத்திரையின் போது பிவிசி பைப்பில் வேல் செய்து ஊர்வலமாகச் சென்றார்கள்.
தீபம் ஏற்றுகிறேன் என்ற பெயரில் தெர்மாகோலில் தீபம் ஏற்றுகிறார்கள். நீதிபதியின் அருகில் ‘சோடா பாட்டில் புகழ்’ மன்னை ஜீயரும் இருக்கிறார்.
கட்சிக்காரர்கள் செய்யலாம்; அது அரசியல். ஆனால், ஒரு நீதிபதி இதைச் செய்யலாமா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *