திருப்பதி, ஜன.25 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2019 முதல் 2024 ஆம் ஆண்டு வரை, ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சிக் காலத்தில் கலப்பட நெய்யால் பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அரசு ஆட்சிக்கு வந்ததும் இது குறித்த சிபிஅய் (CBI) விசாரணை தொடங்கியது. சிபிஅய் இணை இயக்குநர் விரேஷ் பிரபு, டிஅய்ஜி முரளி ராம்பா உட்பட 30 பேர் கொண்ட குழு, கடந்த 15 மாதங்களாக இந்த வழக்கினை விசாரித்தது. ஆந்திரா உள்பட 12 மாநிலங்களில் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
ஆரம்பத்தில், தமிழ்நாட்டிலிருந்தான் கலப்பட நெய் கொள்முதல் செய்யப்பட்டி ருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு விசா ரணை தொடங்கப்பட்டது. ஆனால், இந்த முறைகேட்டிற்கு முக்கியக் காரணம் ‘போலேபாபா ஆர்கானிக் பால்பொருள் தயாரிப்பு நிறுவனம்’ என்பதும், இதற்குப் பல முக்கியப் புள்ளிகள் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில், போலேபாபா நிறுவனத்தின் இயக்குநர்களான போமில் ஜெயின், விபிஎன் ஜெயின் ஆகியோரை சிபிஅய் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. மேலும், 12 மாநிலங்களைச் சேர்ந்த பலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக சி.பி.அய். தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் முதல் குற்றப்பத்திரிகையில் 24 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
