ஏழுமலையானை நம்பி பயனில்லை திருப்பதி கோயில் கலப்பட நெய் மோசடி 24 பேர் மீது குற்றப்பத்திரிக்கை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருப்பதி, ஜன.25 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2019 முதல் 2024 ஆம் ஆண்டு வரை, ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சிக் காலத்தில் கலப்பட நெய்யால் பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அரசு ஆட்சிக்கு வந்ததும் இது குறித்த சிபிஅய் (CBI) விசாரணை தொடங்கியது. சிபிஅய் இணை இயக்குநர் விரேஷ் பிரபு, டிஅய்ஜி முரளி ராம்பா உட்பட 30 பேர் கொண்ட குழு, கடந்த 15 மாதங்களாக இந்த வழக்கினை விசாரித்தது. ஆந்திரா உள்பட 12 மாநிலங்களில் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

ஆரம்பத்தில், தமிழ்நாட்டிலிருந்தான் கலப்பட நெய் கொள்முதல் செய்யப்பட்டி ருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு விசா ரணை தொடங்கப்பட்டது. ஆனால், இந்த முறைகேட்டிற்கு முக்கியக் காரணம் ‘போலேபாபா ஆர்கானிக் பால்பொருள் தயாரிப்பு நிறுவனம்’ என்பதும், இதற்குப் பல முக்கியப் புள்ளிகள் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில், போலேபாபா நிறுவனத்தின் இயக்குநர்களான போமில் ஜெயின், விபிஎன் ஜெயின் ஆகியோரை சிபிஅய் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. மேலும், 12 மாநிலங்களைச் சேர்ந்த பலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக சி.பி.அய். தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் முதல் குற்றப்பத்திரிகையில் 24 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *