இலாபகரமாக இயங்கி வந்த சென்னை-துபாய் ஏர் இந்தியா விமான சேவை திடீர் ரத்து: தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதாகப் பயணிகள் வேதனை!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 24- கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மற்றும் துபாய் இடையே இயக்கப்பட்டு வந்த ஏர் இந்தியா நேரடி விமான சேவை திடீரென நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி முடிவு தமிழ் நாட்டுப் பயணிகள் மற்றும் வான் வழிப் போக்குவரத்து நிபுணர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்றுப் பின்னணி

ஆரம்ப காலத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சென்னை யில் இருந்து துபாய்க்கு நேரடி விமானங்களை இயக்கி வந்தது. 2007ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பிறகு, இது அரசு நிறுவனமாக இருந்ததால் சாமானிய மக்களும் பயணிக்கும் வகையில் கட்டணங்கள் அமைந்திருந்தன. இதனால், இண்டிகோ, எமிரேட்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களுக்குப் போட் டியாக ஏர் இந்தியா விளங்கியது.

புறக்கணிக்கப்படுகிறதா தமிழ்நாடு?

துபாய் – சென்னை வழித்தடம் எப்போதும் அதிக பயணிகளுடன் லாபகரமாகவே இயங்கி வந்தது. இவ்வளவு நல்ல வருவாய் ஈட்டும் ஒரு சேவையை திடீரென நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக பெங்களூரு – துபாய் இடையே ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ சேவையைத் தொடங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் செயல் என விமான போக்குவரத்து நிபுணர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பயணிகளின் கோரிக்கை

ஏற்கனவே தமிழ்நாட்டின் பல்வேறு உள்கட்டமைப்பு திட் டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளில் ஒன்றிய அரசு பாராமுகம் காட்டி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த விமான சேவை ரத்து அந்த அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது.

எனவே, ஒன்றிய – மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு, ஏர் இந்தியா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, சென்னை – துபாய் நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *