சட்டப் பேரவையில் ஆளுநர் உரை என்ற நடைமுறையே அர்த்தமற்றது! ‘தி இந்து’ நாளேடு விமர்சனம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 24– ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் வெளியிட்ட தலையங்கத்தில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சட்டமன்ற கூட்டத் தொடரில் உரையை வாசிக்காமல் ஆளுநர்கள் வெளியேறியதில் எந்த அர்த்தமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மரபின்படி செயல்பட மறுப்பது அனைவரும் அறிந்ததே என்றும் கூறியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் கேரள ஆளுநர் அர்லெகர் ஆகியோர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் கொள்கை தொடர்பான உரையை வாசித்து அரசியலமைப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இந்திய நாடாளுன்ற ஜனநாயகம், பிரிட்டன் நாடாளுமன்ற மாதிரியை அடிப்படையாக கொண்டது என்று குறிப்பிட்டுள்ள தி இந்து தலையங்கம், அந்தநாட்டில் கூட அரசு தயாரித்த உரையை மன்னர் புறக்கணித்ததில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

மாநில அரசுகளின் குரலாக ஆளுநர்கள் செயல்படுவதை தவிர வேறுவழியில்லை என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் குறிப்பிட்டதையும் மேற்கோள்காட்டியுள்ளது. ஆளுநர் ஆர்.என். ரவியின் தொடர்ச்சியான மரபு மீறல்களால், ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டும் என்ற நடைமுறையை நீக்க அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் ‘தி இந்து’ நாளேடு தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் விழுமியங்களுக்கு மதிப்பளித்து முன்மாதிரியாக திகழ வேண்டுமே தவிர, இல்லாத அதிகாரத்தை இருப்பதாகக் கருதி ஆளுநர்கள் செயல்படக்கூடாது என்று ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *