ஜம்மு காஷ்மீரில் 200 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 10 வீரர்கள் உயிரிழப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சிறீநகர், ஜன. 23- ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 200 அடி ஆழ பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் 10 வீரர்கள் உயிரிழந்தனர். 11 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்காக ராணுவ வாகனம் ஒன்று நேற்று (22.1.2026) சென்று கொண்டிருந்தது. குண்டு துளைக்காத இந்த வாகனத்தில் 20-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இருந்தனர்.

இந்நிலையில் பதேர்வா-சம்பா சாலையில், 9,000 அடி உயரம் உள்ள கன்னி டாப் பகுதியில் செல்லும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், 200 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அந்த வாகனம் உருக்குலைந்தது.

மோசமான வானிலை: விபத்து குறித்து ராணுவத்தின் ஒயிட்நைட் படைப் பிரிவு வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில், ‘ஒரு ராணுவ நடவடிக்கைக்காக துருப்புகளை ஏற்றிச் சென்ற வாகனம் தோடாவில் ஆபத்தான நிலப்பரப்பில் பயணித்தபோது மோசமான வானிலை காரணமாக சாலையில் இருந்து தவறிவிழுந்தது’ என்று கூறப் பட்டுள்ளது.

விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்தில் ராணுவம் மற்றும் காவல் துறையினர் உடனடியாக மீட்புப் பணிகளை தொடங்கினர். இதில் 4 வீரர்கள் சடலமாகவும் 17 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். காயம் அடைந்தவீரர்கள் பதேர்வா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இங்கு சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர். இதனால் விபத்தில் உயிரிழந்த வீரர்கள் எண்ணிக்கை 10 ஆகஉயர்ந்தது. 11 வீரர்கள் உயர் சிகிச்சைக்காக உதம்பூர் ராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *