தன் சொத்துக்களையே காப்பாற்ற முடியாத அய்யப்பன் அமலாக்கத்துறை முயற்சியால் ரூ.1.30 கோடி சொத்துக்கள் முடக்கம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சபரிமலை, ஜன.22 அய்யப்பன் கோயில் தங்கம் காணாமல் போனது தொடர்பாக, கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. அக்குழு பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில், அமலாக்கத் துறை  தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாகத் தமிழ்நாடு, கேரளா மற்றும் கருநாடகாவில் மொத்தம் 21 இடங்களில் கடந்த 20 ஆம் தேதி அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இந்தச் சோத னையில் ரூ.1.30 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்றும், 100 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2019 – 2025 காலகட்டத்தில், சபரிமலை கோயிலின் கருவறை கதவு சட்டங்கள், பீடங்கள் மற்றும் துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட பாகங்கள் முறைகேடாக அகற்றப்பட்டு உள்ளன.

அதிகாரப்பூர்வ பதிவேடுகளில் இவை வெறும் ‘செப்புத் தகடுகள்’ என்று திட்டமிட்டுத் தவறாகக் குறிப்பிடப்பட்டு, பழுதுபார்ப்பு என்ற பெயரில் கோயில் வளாகத்திலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்தக் கலைப்பொருட்கள் சென்னை மற்றும் கருநாடகாவில் உள்ள ‘ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்’ மற்றும் ‘ரோடம் ஜூவல்லர்ஸ்’ ஆகிய தனியார் நிறுவனங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு ரசாயனச் செயல்பாடுகள் மூலம் தங்கம் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் பலரை அடையாளம் காணவும், பண மோசடியின் முழுப் பரிமாணத்தை வெளிக்கொண்டு வரவும் தொடர்ந்து விசா ரணை நடைபெற்று வருவதாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆட்டுக்குத் தாடி எதற்கு? – அண்ணாவின் மொழி
அ.தி.மு.க.வில் அண்ணாவின் பெயர் எதற்கு? – புதுமொழி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *