சமூக வலைதளப் பயன்பாட்டால் சீரழியும் இளைய தலைமுறை

Viduthalai
2 Min Read

அரசியல், தமிழ்நாடு

மதுரை, ஏப்.22 சமுகவலை தளங்கள் மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் அறிமுகமாகி அவர்கள் பெண்களின் வாழ்க் கையை நாசமாக்குகிறார்கள். இது போன்ற விவகாரங்கள் சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடியவை என்பதால் அவற்றை இரும்புக் கரங்களுடன் கையாள வேண்டும் என்று காவல்துறைக்கு மதுரை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி யுள்ளது.

ஆட்கொணர்வு மனு

மதுரை உயர்நீதிமன்றத்தில் ரவிச்சந்திரன் என்பவர், தன் னுடைய மகள் காணாமல் போய் விட்டார். அவரை கண்டுபிடித்து தரும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆட்கொணர்வு மனுதாக்கல் செய் திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 14 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் காணாமல் போனதாக வும், அவர்களை மீட்டு ஒப்படைக் கும்படியும் பல்வேறு ஆட் கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.

இந்த வழக்குகளை விசாரிக்கும் போது, சமூகவலைதளங்கள் மூலம் பழகும் நபர்களால் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின் றனர். அவர்களை மீட்டு நீதிமன் றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். பல வழக்குகளில் மருத்துவ பரிசோ தனை செய்தால், அவர்கள் கரு வுற்று இருப்பது உறுதி செய்யப் படுகிறது.

சமூகத்துக்கு அச்சுறுத்தல்

இத்தகைய நிகழ்வுகள் இந்த சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியவை. இவற்றை இரும்புக் கரங்களுடன் கையாள வேண்டும். இதுபோன்ற புகார் களை கட்டுப்படுத்த நிரந்தர அமைப்புகளை தமிழ்நாடு காவல் துறையினர் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். அதற்கு அரசு வழக்குரைஞர் ஆஜராகி, அனைத்து மாவட்டங்களின் தலை நகரங் களிலும் இதுபோன்ற வழக் குகளை விசாரிக்க “மனித மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு” அமைக்கப்பட்டு உரிய நடவடிக் கைகள் எடுக்கப்படுகின்றன என்றார்.

விரைவாக விசாரிக்க அறிவுரை

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விசாரணை பிரிவில் ஒரு ஆண்டுக்கு எத்தனை வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. விசாரணை முடிந்தபின், இந்த அமைப்பு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உரிமை உள்ளதா? என்பது குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இதுபோன்ற வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று காவல்துறையின ருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். பின்னர் இந்த வழக்கை வருகிற ஜூன் மாதம் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *