இட்லி, தேநீர், மஞ்சள் கரோனா உயிரிழப்பை குறைத்தது இந்திய உணவு முறை குறித்து அய்.சி.எம்.ஆர். ஆய்வில் தகவல்

2 Min Read

புதுடில்லி, ஏப். 22 இட்லி, தேநீர், மஞ்சள் உள் ளிட்ட உணவு வகைகளால் இந் தியாவில் கரோனா வைரஸ் தொற்று உயிரிழப்பு வெகுவாகக் குறைந்தது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (அய்சி எம்ஆர்) ஆய்வறிக் கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற் றால் இதுவரை 68.58 லட் சம் பேர் உயிரிழந்துள்ளனர். மிக அதிகபட்சமாக அமெ ரிக்காவில் 11.5 லட்சம் பேரும், இந்தியாவில் 5.31 லட்சம் பேரும் உயிரிழந்து உள்ள னர். உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தபோதிலும் இந்தியா வில் கரோனா உயிரிழப்பு குறைவாகவே இருக்கிறது. இதுதொடர் பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (அய்சிஎம்ஆர்) ஆய்வு மேற்கொண்டது. அய்சி எம்ஆர் மேனாள் தலைவர் நிர்மல்குமார் கங்குலி தலை மையில்  விஞ்ஞானிகள் ஆய்வுகளை நடத்தினர். அவர்களின் ஆய்வறிக்கை அய்சிஎம்ஆர் மருத்துவ இதழில் அண்மை யில் வெளியானது. அதில் கூறியிருப்பதாவது:

அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை மிகவும் குறைவு. ஆனால் அந்த நாடு களில் கரோனா தொற்றால் அதிக உயிரிழப்பு ஏற்பட் டது. இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக இருந்த போதிலும் கரோனா தொற் றால் ஏற்பட்ட உயி ரிழப்பு மிகவும் குறைவாக இருக் கிறது. இதற்கு இந்தியர் களின் உணவுப் பழக்க, வழக் கங்களே முக்கிய காரணம்.

இந்தியர்கள், மேற்கத் திய மக்களைவிட 4 மடங்கு அதிகமாக காய்கனிகளை சாப்பிடுகின்றனர். நாளொன் றுக்கு 1.2 கிராம் அளவுக்கு தேநீர் குடிக் கின்றனர். 2.5 கிராம் அள வுக்கு மஞ்சளை உணவு வகைகளில் சேர்க்கின்ற னர். இதன் காரணமாக இந்தியர் களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதி கரிக்கிறது. தென்னிந்திய மக்கள் இட்லி, சாம் பாரையும், வடஇந்திய மக்கள் ராஜ்மா அரிசி சாதத்தையும் விரும்பி சாப்பிடுகின்றனர். இத் தகைய உணவு வகை களால் இந்தியர்களின் ரத்தத்தில் இரும்பு, ஜிங்க் சத்து அதிகரிக்கிறது. சுருக் கமாக சொல்வதென்றால் இந்தியர்களின் உணவுப் பழக்க, வழக்கத்தால் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கரோனா வைரஸ் தொற்று உயிரிழப்பு வெகுவாகக் குறைந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *