மகாராட்டிரா மாநிலத்தில் 7 ரூபாய் 65 பைசாவை வழிப்பறி செய்ததாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த வழக்கை மசாகோன் நீதிமன்ற நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இதுபோன்ற வழக்குகளால் நீதிமன்றத்தின் சுமை அதிகரிக்கிறது. புகார்தாரர் உயிரோடு இருந்தால் அரசு தரப்பில் ரூ.7.65-அய் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
1977-இல், அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் 7 ரூபாய் 65 பைசாவை பறித்துச் சென்ற தாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். காவல்துறையினர் தேடியும் அந்த நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் நீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்ட வழக்கு தற்போது முடித்து வைக்கப்பட்டுள்ளது.
