பன்னீர்செல்வம் ஆதரவு ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினருமான இரா.வைத்திலிங்கம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை இன்று (21.1.2026) பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்களிடம் கொடுத்தார்.
இதையடுத்து அண்ணா அறிவாலயத்துக்கு சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து பூச்செண்டு கொடுத்து அவரது தலைமையில் தன்னை தி.மு.கவில் இணைத்துக் கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.
