திருமுட்டம் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருமுட்டம், ஜன. 20– சிதம்பரம்(கழக)மாவட்டத்திற்குட்பட்ட திருமுட்டம் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் திரு முட்டம் மக்கள் மருந்த கத்தில்  19.1.26.மாலை 6 மணியளவில் மாவட்ட கழகத் தலைவர் பேரா. பூ. சி. இளங்கோவன் தலை மையிலும், மாவட்ட. கழகச் செயலாளர் மழவைகோவி. பெரியார்தாசன் முன்னி லையில் நடைப்பெற்றது.

மாவட்ட கழகத் துணை செயலாளர் ப. முருகன், மாவட்ட இணைத் தலைவர் சிற்பி சிலம்பரசன், மாவட்ட இணைச் செயலாளர் மா. பஞ்சநாதன், ஒன்றிய தி. க. நிர்வாகிகள் பெரியண்ணசாமி, கொழை ராசசேகரன், நகரதலைவர் சிவ.பாண்டியன், ப. க. வெற்றிவேல் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்கள். நிறைவாக மாவட்ட தலைவர் பேரா. பூ. சி. இளங்கோவன் மாநில செயற்குழுவின் தீர்மானங்களை செயல் படுத்துதல், கிராமங்களில் இயக்கப் பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல், கிளைகழகங்கள் தோரும் தோழர்களை சந்தித்தல், பெரியார்உலகம் நிதி, விடுதலை சந்தா திரட்டுதல் –செயல்பாடுகள் குறித்து விளக்கமாக பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *