அயோத்தியில் மாமிச உணவுகளுக்குத் தடை ஏன்? இராமனும், சீதையும் மாமிசம் உண்டவர்களே! – கருஞ்சட்டை –

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அயோத்தியில்  மாமிச உணவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாம்!

மூல நூலான வால்மீகி இராமாயணத்தை உண்மையில் படித்தவர்களுக்கு ராமனும், சீதையும் மாமிசம் உண்டனர் என்பது தெற்றென ஒளிவு மறைவின்றி விளங்கும்.

இதோ ஆதாரம் பேசுகிறது:

வால்மீகி ராமாயணத்தில் ராமன் மாமிசம் உண்டதைக் குறிப்பிடும் ஸ்லோகங்கள் முக்கியமாக அயோத்தியா காண்டத்தில் வருகின்றன. இவற்றை நேரடி மொழிபெயர்ப்பின் படி பார்த்தால், அவை வேட்டையாடுதல் மற்றும் உண்பதைக் குறிக்கின்றன.

முக்கியமான சில இடங்கள் இதோ:

  1. கங்கையைக் கடந்த பின் (அயோத்தியா காண்டம், சர்க்கம் 52)

ராமன், சீதை மற்றும் லட்சுமணன் கங்கையைக் கடந்து வத்ச நாட்டிற்குள் நுழைந்தபோது, பசியின் காரணமாக வேட்டையாடியதை இந்த ஸ்லோகம் விவரிக்கிறது:

* (அயோத்தியா காண்டம், 52.102)

கருஞ்சட்டை

பொருள்: அவர்கள் அங்கு (பசியால்) நான்கு மகா மிருகங்களை (வராகம் – பன்றி, பிருஷதம் – புள்ளிமான், ருரு – கலைமான், மகா மிருகம் – பெரிய மான்) வேட்டையாடினர். பிறகு பசியைத் தீர்த்துக்கொள்ள அவற்றைச் சமைத்து உண்டு, மாலை நேரத்தில் மரத்தடிக்குச் சென்றனர்.

  1. பரதனிடம் காட்டின் நிலையை விவரித்தல் (அயோத்தியா காண்டம், சர்க்கம் 103) பரதன் ராமனைத் திரும்ப அழைக்கக் காட்டிற்கு வந்தபோது, தான் எப்படி வாழ்கிறேன் என்பதை ராமன் கூறுகிறார்:

* (அயோத்தியா காண்டம், 103.30) 

பொருள்: “ஒரு மனிதன் எதை உண்கிறானோ, அதையே அவன் தெய்வங்களுக்கும் படைக்கிறான். எனவே, நான் வேட்டையாடிய பன்றி இறைச்சி மற்றும் காட்டில் கிடைத்த கனி வர்க்கங்களையே தெய்வங்களுக்குப் படைக்கிறேன்.”

  1. சீதை ராவணனிடம் கூறியது (ஆரண்ய காண்டம், சர்க்கம் 47)

ராவணன் சந்நியாசி வேடத்தில் வந்தபோது, சீதை அவரிடம் ராமனின் வேட்டைப் பழக்கத்தைப் பற்றிக் கூறுகிறார்:

*(ஆரண்ய காண்டம், 47.22-23)

கருஞ்சட்டை

பொருள்: “என் கணவர் ராகவர் விரைவில் வந்துவிடுவார். அவர் கலைமான்கள், பன்றிகள் மற்றும் புள்ளிமான்களை வேட்டையாடி நிறைய இறைச்சியைக் கொண்டு வருவார்.”

உண்மை இவ்வாறு இருக்க, அயோத்தியில் மாமிச உணவு தடை செய்யப்படுவது அடிப்படையிலேயே தவறானதாகும்.

மாமிசம் சாப்பிடுவது ஏதோ குற்றமான காரியம் போலவும், இராமன் மாமிசம் உண்ணாதவன் போலவும் நிரூபிக்கப் படாதபாடுபடுகிறார்கள்.

அந்தோ, பரிதாபம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *