கருநாடகா மங்களூருவில் வங்கதேசத்தவர் என்று கூறி ஜார்க்கண்ட் தொழிலாளிமீது இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மங்களூரு, ஜன.18 பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப் பற்றியது. இந்த வெற்றிக்குப் பிறகு நாடு முழுவதும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம், விஎச்பி உள்ளிட்ட அமைப்பு களின் இந்துத்துவா குண்டர்கள் முஸ்லிம்,  தலித் மற்றும் புலம் பெயர்ந்த தொழி லாளர்கள் மீது வங்கதேசத்தவர் என்று வகுப்பு வாத கண்ணோட்டத்துடன் முத்திரை குத்தி  தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

கேரளா உள்ளிட்ட பல மாநி லங்களில் இந்துத்துவா குண்டர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல்  நடத்தினர். தற்போது கருநாடகாவிலும் இத்தகைய  தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. கருநாடக மாநிலம் மங்களூருவில் தில்ஜான் அன்சாரி என்ற முஸ்லிம் இளை ஞர் கடந்த 15 ஆண்டு களாக வசித்து வருகிறார். அங்கு பணிபுரிந்து வரும் இவருக்கு கன்னட மொழி சரளமாகப் பேசத் தெரியும்.  இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு இந்துத்துவா குண்டர்கள் 4 பேர் தில்ஜானை வழிமறித்துத் தாக்கியுள்ளனர். அவர்கள் அன்சாரியிடம்,”நீ வங்கதேசத்தவர் தானே?” என்று அவரது ஆதார் அட்டையைக் கேட்டு மிரட்டியதோடு,“ஜெய் சிறீராம்” என்று முழக்கமிடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் குலூரைச் சேர்ந்த சாகர், தனுஷ், ரதீஷ் தாஸ், மோகன்  ஆகிய 4 பேரை காவல்துறையினர் அடை யாளம் கண்டுள்ளனர். இவர்களில் ரதீஷ் தாஸ், தனுஷ், சாகர் ஆகிய மூன்று பேர் இது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். தலை மறைவாக உள்ள மோகனை தேடும் பணியில் காவல்துறையினர்  ஈடுபட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *