பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா உற்சாகக் கொண்டாட்டம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருச்சி, ஜன. 17- திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் ஒன்றிணைந்து நடத்திய சமத்துவப் பொங்கல் விழா 13.1.2026 அன்று காலை 11.30 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு வருகை தந்த பெரியார் கல்விக் குழுமங்களின் தாளாளரும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளருமான  முனை வர் வீ. அன்புராஜ் அவர்களுககு மழலையர் பிரிவு மாணவர்கள் பூங் கொத்துக் கொடுத்து வரவேற்றனர்.

பொங்கல் விழாவினை திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் வீ. அன்புராஜ்  தலைமையேற்று விழாவினைச் சிறப்பித்தார். விழாவில் முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணித் தோழர்கள் மற்றும் மாணவ, மாணவியர் அனைவரும் வண்ணமயமான ஆடைகளை அணிந்து வருகை தந்திருந்தனர்.  மேலும் தமிழர் பாரம்பரிய முறைப்படி இசைக்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து, வளாகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து, புதுப்பானையில் பொங்கலிட்டு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சமத்துவ உணர்வுடன் கொண்டாடினர்.

விழாவில் பங்கேற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் அனைவருக்கும் திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் வீ. அன்புராஜ்  தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மழலையர் பிரிவு மாணவர்களுக்குத் தனது கையால் பொங்கல் ஊட்டி மகிழ்ந்த அவர், மாணவர்களுடன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். நிர்வாகத்தின் சார்பில் மாணவர்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

சமத்துவப் பொங்கல் விழாவை முன்னிட்டு கல்வி வளாகம் விழாக்கோலம் பூண்டு, சமத்துவக் கொள்கையைத் பறைசாற்றும் வகையில் இவ்விழா அமைந்திருந்ததோடு, மாணவ மாணவியரின் உற்சாகக் குரல்கள் வளாகம் முழுவதும் எதிரொலித்து மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *