கிருட்டினகிரியில் ஆணவப்படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

1 Min Read

தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமையேற்று கண்டன உரை

அரசியல்

கிருட்டினகிரி,ஏப்.23- கிருட்டினகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஊற்றங்கரையில் நடைபெற்ற ஆணவப் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் 22.4.2023 அன்று கிருட்டினகிரி பேருந்து நிலையம் அருகில் நடை பெற்றது.

இதில் சேலம்,கிருட்டினகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங் களில் உள்ள விடுதலை சிறுத்தை கள் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு ஜாதி வெறிக்கு எதிராகவும், ஜாதிமறுப்பு திருமணம் செய்யும் தம்பதியினருக்கு பாதுகாப்பு கேட்டும், ஆணவக்கொலை தடுப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற கோரியும், ஆணவக் கொலைக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டியும், கிருட்டினகிரி மாவட்டத்தை வன்கொடுமை மாவட்டமாக அறிவிக்க கோரியும் முழக்கமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கனியமுதன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினர். தொகுதி செயலாளர்கள் தியாகு, ராமச்சந்திரன், செம்பட்டி சிவா, பாவரசு, தகடூர் தமிழ்செல்வன், ஜீவா, திராவிட ராஜா, இமயவரம்பன், இளைய ராஜா,  துணைப் பொதுசெயலாளர் ரஜினிகாந்த், சட்டமன்ற உறுப் பினர் பாலாஜி மற்றும் மாயவன், நந்தன், சுபாஸ் மற்றும் ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *