அம்பேத்கர் பள்ளி சென்ற இந்நாளில்…!

1 Min Read

தமிழ்நாடு

7.11.1900 இன்றைய தினம் அண்ணல் அம்பேத்கர் முதல் முதலாக புனெவிற்கு அருகில் உள்ள சிறிய நகரமான சதராவில் உள்ள ஒரு பள்ளியில் சேர்க்கப் பட்டார். 

 முதல் நாளே அவருக்கு பள்ளியின் உள்ளே வந்து அமர அனுமதியில்லை. அவரை பள்ளிக்கு அழைத்து வந்தவரிடம் பல்வேறு விதிமுறைகள் கூறப்பட்டன. பின்னாள்களில் அவர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களால் மோசமான தீண்டாமைக்கு ஆட்படுத்தப்பட்டார். 

அவரது நோட்டுப் புத்தகத்தைக் கூட மரத்தில் இருந்து உடைத்துகொண்டுவரப்பட்ட ஒரு குச்சியைக் கொண்டுதான் ஆசிரியர் புரட்டிப் பார்ப்பார். 

இந்த தீண்டாமைக் கொடுமைகள் தான் பிற் காலத்தில் இதுவரை யாருமே படித்திராத பல பட்டங் களைப் பெறவும். இந்திய அரசமைப்புச்சட்டத்தை இயற்றவும் காரணமாக இருந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *