சென்னை, ஏப்.23- வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சட்ட மசோதா ஒன்றை 21.4.2022 அன்று அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ்நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக நிலங்களை ஒருங்கிணைப்பதற்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இந்த சட்டம், தமிழ் நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்களான) சட்டம் -2023 என்று அழைக்கப்படும். நீர்நிலைகள், ஆறுகள், ஓடைகள் போன்றவை இயற்கை நிகழ்வுகளால் தனது பரப்பை விரிவாக்கிக் கொண்டு போக்கை மாற்றிக் கொள்கின்றன.
இவை பொதுநலன் கருதி பாதுகாக்கப்பட வேண்டும். தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக தண்ணீர் அதன் போக்கை மாற்றிக் கொண்டால், அந்த நிலத்திற்கான அரசின் முடிவின்படி, வருவாய் வாரியத்தின் நிலையாணை அடிப்படையில் அதை வழங்க வேண்டும்.
இந்த நில பரிமாற்ற முறையை சட்டப் பூர்வமாக ஒழுங்குபடுத்துவதற்கும், நீர் நிலையை பாதுகாப்பதற் கும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இந்த சூழ்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த பெரிய திட்டங்களுக்காக அரசு நிலங்களை ஒருங்கிணைக்கும் செயல் முறையை முறைப்படுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க இந்த சட்டம் இயற்றப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.