பேரவையில் மசோதா நிறைவேறியது நீர்நிலைகளை பாதுகாக்க புதிய சட்டம் அறிமுகம்

1 Min Read

அரசியல்

சென்னை, ஏப்.23- வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சட்ட மசோதா ஒன்றை 21.4.2022 அன்று அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: 

தமிழ்நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக நிலங்களை ஒருங்கிணைப்பதற்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது.  இந்த சட்டம், தமிழ் நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்களான) சட்டம் -2023 என்று அழைக்கப்படும். நீர்நிலைகள், ஆறுகள், ஓடைகள் போன்றவை இயற்கை நிகழ்வுகளால் தனது பரப்பை விரிவாக்கிக் கொண்டு போக்கை மாற்றிக் கொள்கின்றன.

 இவை பொதுநலன் கருதி பாதுகாக்கப்பட வேண்டும். தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக தண்ணீர் அதன் போக்கை மாற்றிக் கொண்டால், அந்த நிலத்திற்கான அரசின் முடிவின்படி, வருவாய் வாரியத்தின் நிலையாணை அடிப்படையில் அதை வழங்க வேண்டும். 

இந்த நில பரிமாற்ற முறையை சட்டப் பூர்வமாக ஒழுங்குபடுத்துவதற்கும், நீர் நிலையை பாதுகாப்பதற் கும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இந்த சூழ்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த பெரிய திட்டங்களுக்காக அரசு நிலங்களை ஒருங்கிணைக்கும் செயல் முறையை முறைப்படுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க இந்த சட்டம் இயற்றப்படுகிறது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *