புதுடில்லி, ஜன.13-கணவன் கொலை வழக்கில் சாட்சியாக இருந்த மனைவி பட்டப்பகலில் சுட்டுக் கொலை.
டில்லியில் பயங்கரம்
டில்லியின் ஷாலிமார் பாக் பகுதியை சேர்ந்தவர் 44 வயதான ரச்சனா. இவர் ஷாலிமார் பாக் நலச் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த 2023ஆம் ஆண்டு, ரச்சனாவின் கணவர் விஜயேந்திரன், மனைவி ரச்சனா கண் முன்னாலேயே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் ரச்சனா தான் முக்கிய சாட்சி ஆவார்.
இந்த வழக்கில் 5 பேர் குற்றவாளி களாக கண்டறியப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (11.1.2026) காலை ஷாலிமார் பாக் பகுதியில், ரச்சனா தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்குச் சென்றபோது, பைக்கில் வந்த இருவர் ரச்சனாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடினர். ரச்சனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
கணவர் கொலை வழக்கில் ரச்சனா சாட்சி சொல்வதைத் தடுப்பதற்காகவே, அந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளே இவரையும் கொலை செய்திருக்க லாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் சுட்டுவிட்டுத் தப்புவது பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
