காங்கிரஸ் ஆட்சியின் போது எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட வேண்டும்: ராகுல்காந்தி

1 Min Read

அரசியல், இந்தியா

பெங்களுரு, ஏப். 24- காங்கிரஸ் ஆட்சியின் போது எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

மே 10ஆம் தேதி நடைபெற வுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கருநாடகாவில் பிரச் சாரம் மேற்கொண்ட ராகுல்காந்தி, “கருநாடகாவில் மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் 150 இடங்களைக் கைப்பற்றும். “40 சதவீத பாஜக அரசு” 40 இடங்களை மட்டுமே பெறும். பாரதிய ஜனதா அரசு தான் ஊழல் மிகுந்த அரசு, 40 சதவீதம் கமிஷன் வாங்கு கிறார்கள். இதே பணம்தான் முந்தைய அரசின் சட்டமன்ற உறுப்பினர்களை திருட பயன்படுத்தப்பட்டது. கோவா, மத்தியப் பிரதேசம், கருநாடகா, வடகிழக்கு மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் பணத்தின் ஆதாரம் குறித்து பிரதமர் கூறுவாரா?

காங்கிரஸ் ஆட்சியின் போது எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட வேண்டும். நாட்டினுடைய செல்வத்தை ஓபிசி பிரிவினருக்கு தர விரும்பாத காரணத் தினால் மட்டுமே இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை பிரதமர் மோடி வெளியிடவில்லை.  நாட்டில் வெறுப்பு மற்றும் வன்முறைச் சூழலை உருவாக்கும் வகையில் பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் உள்ளது” எனக் கூறினார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *